TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த மாதம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பபதிவு நடைமுறை இன்றுடன் முடிவடைய உள்ளது. இதற்க்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
குரூப்1 தேர்வு:
தமிழகத்தில் துணை கலெக்டர் 18 பணியிடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி) பதவிகளில் 26 பணியிடங்கள் வணிகவரித்துறை உதவி ஆணையர் பதவியில் 25 பணியிடங்கள், கூட்டுறவு துறை துணை பதிவாளர் பதவியில் 13 காலிப்பணியிடங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 7 பணியிடங்கள் மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என மொத்தம் 92 பணியிடங்களை கொண்ட குரூப்1 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதனை தொடர்ந்து http://tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
தமிழக பள்ளிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு – உயர்நீதிமன்ற உத்தரவு!
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வயது வரம்பு 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். இத்தகைய தகுதியுடையோர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது. வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (22.08.2022) முடிவடைய உள்ளது.
அதனால் விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30ம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும். இந்த முதல்நிலைத் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இதில் மொத்தம் 200 வினாக்கள் இடம்பெறும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்