TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. கூட்டுறவு தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பணிக்கு ஏப்ரல் 30-ல் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா எழுச்சி காரணமாக TNPSC எந்த தேர்வுகளையும் நடத்த வில்லை. இருப்பினும் தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால், இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் குரூப் 2, குரூப் 2A (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய 5529 பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த தேர்வுக்கு மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் இத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் முடிந்து விட்டது.

அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை – சூப்பர் உத்தரவு!

இதை தொடர்ந்து குரூப்4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் 29 அன்று வெளியானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 பதவியில் மொத்தம் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதனை தொடர்ந்து கூட்டுறவு தணிக்கை துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று அண்மையில் வெளியானது. இதன்படி,கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் பணியில் 8 காலிப்பணியிடங்கள் இருந்தது. இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ. 56,100 – 1,77,500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் எம்.ஏ(கூட்டுறவு) அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவு டிப்ளோமா அல்லது ஐசிஏஐ படித்தவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ExamsDaily Mobile App Download

இந்த வகையில் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் இப்பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் பணிக்கு விண்ணப்பிக்க பிப்.21 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்து உள்ளனர். இந்நிலையில் கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குநர் பதவிக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!