TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழகத்தில் 2022ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC தேர்வு:
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கத்தால் போட்டித் தேர்வுகள் நடைபெறாததால் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இதனால் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப 2022ம் ஆண்டு 32 வகையான போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்தது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இலவச மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. மேலும் குரூப் 4 & VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டு TNPSC தேர்வுகளில் ஏராளமான மாற்றங்களையும் தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. அதன்படி அனைத்து தேர்வுகளிலும் தமிழ்மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் முறைகள் குறித்த உரிய அறிவுரைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 19ம் தேதி நடைபெறும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என TNPSC அறிவித்துள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வு தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் TNPSC இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.