TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது தேர்வர்களின் நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ஆதார் இணைப்பு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் அரசு பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல தேர்வுகளை நடத்தி வருகிறது. அத்துடன் கொரோனா பரவல் குறைந்த நிலையில் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதமும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதமும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் பிப்.19ம் தேதி பொது விடுமுறை – எங்கெங்கு தெரியுமா? முழு விபரங்கள் இதோ!
இந்த போட்டி தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு சீர்திருத்தங்களை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு குறைக்க முடியும். அத்துடன் TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும் நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.மேலும் இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிப்.17 மாலை 6 மணிமுதல் புதிய கட்டுப்பாடுகள் – தேர்தல் பிரச்சாரம் நிறைவு!
இதில் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் குறித்த விவரங்களை இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் இனி வரும் காலங்களில் நிரந்தரப் பதிவு கணக்கை பயன்படுத்தி விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இதனை வருகிற பிப்ரவரி 28ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற 18004190958 அல்லது [email protected] /[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.