TNPSC முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகின்றனர். தற்போது ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு தேதியை TNPSC தேர்வாணையம் மாற்றியுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
தேர்வு தேதி மாற்றம்
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2 தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 5529 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற உள்ளது. அத்துடன் குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இத்தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு ஜூன் மாதத்திலும் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது TNPSC நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் TNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்த பல்வேறு நடவடிக்கைகளை வருகிறது. அதனால் TNPSC நடத்தும் போட்டித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி கொண்டு வருகின்றனர்.
NIT திருச்சியில் ரூ.36,580 ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!
இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற மே 3ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடிக்க வேண்டும். ஒருங்கிணைந்த பொறியாளர் பணித் தேர்வு வருகிற ஜூன் 26ம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஜூலை 2ம் தேதி அன்று நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு தேதி மாற்றத்தை இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.