TNPSC தேர்வாணைய தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
தமிழக அரசின் புதிய சட்டங்கள் படி மின்சாரம், வீட்டு வசதி உள்ளிட்ட வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள் போன்றவை தங்களாக பணி நியமனம் செய்ய முடியாது என்று தேர்வாணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
TNPSC தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு துறை பணியிடங்களுக்கான TNPSC போட்டித் தேர்வுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழ் மொழிக்கும், அரசு பணியில் தமிழ் நாட்டினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் 40% மதிப்பெண்கள் பெறுவதும் அவசியமாகும். அதனை தொடர்ந்து TNPSC இணையதள நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு வரும் 28ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு – முழு விவரம் இதோ!
இந்த நிலையில் குரூப் 2 தேர்வு குறித்த அறிவிப்பு பிப்ரவரி 23 அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய TNPSC புதிய சட்டங்களின் படி மின்சாரம், வீட்டு வசதி உள்ளிட்ட வாரியங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியன தாங்களாக பணி நியமனம் செய்ய முடியாது. தேர்வுகள் மூலமாகவே காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். மேற்கண்ட துறை பணியிட தேர்வுகளை எந்த குரூப் தேர்வுகளுடன் இணைக்கலாம் என்ற ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி!
இதனையடுத்து வாரியங்கள், சங்கங்கள் ஆகியவற்றுக்கு தோ்வுகள் நடத்த மே மாதத்தில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும். இந்தத் தோ்வுகள் குறித்த விவரங்கள் ஆண்டு திட்ட அறிக்கையிலும் சோ்க்கப்படும். இது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வரும் மார்ச் மாதம் அரசு பணியாளா் தோ்வாணையம் வெளியிடும் என்று TNPSC தலைவர் கூறியுள்ளார்.