TNPSC குரூப் 5A தேர்வு குறித்த முழு விவரம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தொடர்ந்து TNPSC போட்டித் தேர்வுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதங்களில் நடந்த குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளை தொடர்ந்து தற்போது குரூப் 5A தேர்வின் தேதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
TNPSC குரூப் 5 தேர்வு
தமிழகத்தில் 2022 மே மாதம் திட்டமிட்டபடி குரூப் 2,2A தேர்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 4 & VAO தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை இதனை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குரூப் 5 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் ஆகஸ்ட் 29ம் தேதி மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
மொத்தமுள்ள 161 பணியிடங்களுக்கான விண்ணப்பபதிவு இன்று முதல் துவங்கி உள்ளது விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி நிரந்தர பதிவு கணக்கு வாயிலாக தமிழ்நாடு அமைச்சுப் பணி , தமிழ்நாடு நீதி அமைச்சு பணியில் பணிபுரிபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து குரூப் 5A முதல் தாள் தேர்வானது டிசம்பர் 18ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். நடைபெறும் எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இட ஒதுக்கீடு விதி ஆகிய விதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்