TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & முழு விபரம் இதோ!
TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே இந்த தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய தகவல்கள்:
TNPSC மூலம் அரசு துறைகளில் 4 ஆம் நிலை பதவிகளை நிரப்ப நடத்தப்படும் தேர்வு குரூப் 4 தேர்வு ஆகும். இருப்பினும் குரூப் 4 தேர்வுக்கு தான் அதிகமான போட்டிகள் நிலவி வருகிறது. ஏனென்றால் இந்த தேர்வுக்கு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். இதில் சில ஆண்டுகளுக்கு முன் VAO பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது.இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist),சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer),வரித் தண்டலர் (Bill Collector),நில அளவர் (Field Surveyor),வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பதவிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் முழுவதுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!
இந்த குரூப் 4 தேர்வுக்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
தமிழகம் முழுவதும் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – அதிகாரபூர்வ அரசாணை வெளியீடு!
இதனை தொடர்ந்து TNPSC போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு பொறுத்தவரை மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி தான். ஆனால் போட்டித் தேர்வுகளை பொறுத்தவரை தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒரு அளவுகோல். மேலும் இந்த தேர்வுக்கு எழுத்து தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது.