TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்!

0
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு - தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்!
TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்!

தமிழகத்தில் குரூப் 4 & VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தாங்கள் படித்த பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறும் பணிகளில் தேர்வர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குரூப் 4&VAO:

தமிழகத்தில் அரசுத் துறை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் அதிக எண்ணிக்கையானோர் எழுதக் கூடிய குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பை ஏராளமான தேர்வர்கள் எதிர்பார்த்து வந்தனர். இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு 2022 மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

அதன்படி கடந்த மார்ச் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க ஏப்ரல் 28ம் தேதி வரையும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பத்துடன் தமிழ்வழிக் கல்வியில் படித்ததற்கான சான்றிதழை இணைக்க தாங்கள் படித்த பள்ளிகளில் சான்றிதழ் பெற தேர்வர்கள் பள்ளிகளில் குவிந்து வருகின்றனர். இதனால் உடல் அலைச்சலும் கால வியரமும் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

ExamsDaily Mobile App Download

இது குறித்து தேர்வர்கள் கூறும் போது, சில பள்ளிகளில் இந்த சான்றை உடனடியாக அளித்து விடுகின்றனர். பல பள்ளிகளில் தாமதமாக அளிக்கின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க குறுகிய கால அவகாசமே உள்ளதால் தேர்வர்கள் விண்ணப்பித்தால் அடுத்த சில மணி நேரங்களில் கிடைக்கும் வகையில் பள்ளி நிர்வாகத்தினர் சான்றிதழை வழங்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர். தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் 20% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் குரூப் 4 & VAO தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தாங்கள் படித்த பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெறும் பணிகளில் தேர்வர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!