TNPSC குரூப் 3, 4 VAO காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய நடைமுறைகள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 2, 2A , 3, 4 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
TNPSC:
தமிழகத்தில் அரசு துறையில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்தால் போட்டித்தேர்வுகளை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும் காலிப்பணியிடங்களை பொறுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. கடந்த 2 வருடங்களாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் திட்டமிடப்பட்டிருந்த குரூப் தேர்வுகளும் நடைபெறவில்லை. 2022ம் ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து இந்த ஆண்டு முதல் TNPSC தேர்வுகளை நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – பெயர் சேர்த்தல் & நீக்குதல்! எளிய வழிமுறைகள்!
அதில் 2022ம் ஆண்டில் 22 வகையான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு முதல் போட்டித்தேர்வுகளில் புதிய மாற்றங்களையும் தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் அரசு பணிகளில் தமிழ் மக்களை பணியமர்த்தும் நோக்குடன் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 முதல் 2 நாட்களுக்கு வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1, 2, 2A , 3, 4 உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் கொள்ளப்பட்டு மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குரூப்-3, 4, 7-பி, 8 போன்ற பதவிகளுக்கான போட்டித்தேர்வின் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வுக்கான பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இணையதளத்தில் வெளியாகி உள்ளது.