TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Result தாமதத்திற்கான காரணம் இதோ!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Result தாமதத்திற்கான காரணம் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - Result தாமதத்திற்கான காரணம் இதோ!
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Result தாமதத்திற்கான காரணம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் திட்டமிட்டபடி கடந்த மே 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றியும் எந்த காரணத்தால் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளது என்பது குறித்தும் பார்ப்போம்.

தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. மேலும் கால அட்டவணையில் குறிப்பிட்டபடி, குரூப் 2,2A பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் கடற்படைக்கு புதிய கொடி – பிரதமர் மோடி பெருமிதம்!

இதையடுத்து இத்தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டப்படி கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வு 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே எழுதியுள்ளனர். இதையடுத்து தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் தேர்வு முடிவுகளுக்காக எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை இத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதன் காரணமாக முதன்மைத் தேர்வுக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளபவர்கள் மிகுந்த கவலையில் உள்ளார்கள்.

அத்துடன் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பாக வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இது தேர்வு முடிவுகள் தாமதமாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இதற்கான தீர்ப்பு கடந்த 24 ஆம் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!