TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ஆன்சர் கீ குறித்த முக்கிய தகவல்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசுத்துறைகளில் 5529 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிலையில் குரூப் 2 தேர்வு குறித்த முக்கிய தகவலை இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
TNPSC Group 2 ஆன்சர் கீ
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. 5413 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதிய நிலையில், 1.83 லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை. இந்த தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
EPFO ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – எந்த நேரத்திலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!
இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பல கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், ஒரு சில கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோல் சர்ச்சைகள் எழுவது இயல்பு தான் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது
Exams Daily Mobile App Download
மேலும், தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வர்கள் தேர்வுக்கான ஆன்சர் கீ க்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோரிலிருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ் வீதம் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.