TNPSC குரூப் 1 வினா, விடைத்தாள் குளறுபடி – நிபுணர் குழு அமைப்பு!!
குரூப் 1 தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று இருப்பதாக TNPSC தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இது குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
குரூப் 1 தேர்வு:
கடந்த ஜனவரி 3ம் தேதி அன்று TNPSC தேர்வு ஆணையம் தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வினை நடத்தியது. கடந்த வருடம் TNPSC தேர்வில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்ததால் இந்த முறை TNPSC ஆணையம் தேர்வில் பல புதிய சிறப்பு நடைமுறைகளை கொண்டு வந்தது. இதன் மூலம் தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டுள்ள்ளது.
30 நிமிடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி – பிப்.1 முதல் ‘தட்கல் புக்கிங்’ அறிமுகம்!!
தேர்வாணைய தலைவர்:
TNPSC தேர்வாணைய தலைவராக தற்போது பாலச்சந்திரன் உள்ளார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் TNPSC தேர்வில் உள்ள குளறுபடிகள் பற்றி கேட்டனர். அவர், “சமீபத்தில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாநிலம் முழுவதும் 1,36,000 பேர் எழுதியுள்ளனர். அந்த தேர்வில் வினாத்தாளில் சில வினாக்கள் மற்றும் சில விடைகள் பிழையானதாக இருப்பதாக தேர்வாணையத்திற்கு புகார்கள் வந்துள்ளது.
அரசுப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விரைவில் நியமனம்!!
இதனால் புகார்கள் குறித்து ஆராய்வதற்காக நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர். நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின் படி, தேர்வாணையத்தில் விவாத்திக்கப்பட்டு தேர்வு எழுதியவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும். ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்