TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு & தேர்வு முறை!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு
தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வு செய்து நிரப்பும் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் குரூப் 1 சிவில் சர்விஸ் தேர்வுகள் துவங்கி VAO வரையிலான பணியிடங்களுக்கு TNPSC சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டித்தேர்வு கால அட்டவணைகள் கடந்த ஆண்டு வெளியான போதிலும், கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
தேர்வு இல்லாமல் தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தொற்று குறைந்திருக்கும் சூழலில், TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவை அக்டோபர் மாதம் வெளியாகலாம் என கூறப்பட்டு வருகிறது. இப்போது, குரூப் 4 தேர்வுகளில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது மட்டுமே தகுதியானதால், தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் போட்டித்தேவுக்கு தயாராகும் தேர்வர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதன் படி,
TNPSC குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி:
VAO, இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படுவது உண்டு.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை? உண்மை நிலவரம் இதுதான்!
வயது வரம்பு:
VAO பதவி – பொதுபிரிவினருக்கு 21- 30 மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகைகள் உள்ளது. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பணிகளில் – பொதுப் பிரிவினருக்கு 18 – 30 வரையும் மற்றும் பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் சலுகைகள் உண்டு. இதில் குறிப்பாக 12ம் வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் பதவி கொடுக்கப்படும். இதில் எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்களுடன் 2 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்கள் அவர்களுக்கான மொழியை தேர்வு செய்து தமிழ் அல்லது ஆங்கிலம் பாடத்தில் இருந்து கேட்கப்படும் 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இவை அனைத்தும் பொது அறிவை சார்ந்ததாக இருக்கும். குறிப்பாக 75 பொது அறிவு வினாக்களுடன், 25 திறனறி தேர்வுகள் அனைத்தும் அப்ஜக்டிவ் வகையில் கேட்கப்படும்.
தேர்வு எப்போ நடக்கும். தேர்வுக்கு எப்படி பதிவு செய்வது