TNPSC Group 4 தேர்வு முடிவுகள்.. கட்-ஆப் மதிப்பெண்கள் குறையுமா? காத்திருக்கும் தேர்வர்கள்!

0
TNPSC Group 4 தேர்வு முடிவுகள்.. கட்-ஆப் மதிப்பெண்கள் குறையுமா? காத்திருக்கும் தேர்வர்கள்!
TNPSC Group 4 தேர்வு முடிவுகள்.. கட்-ஆப் மதிப்பெண்கள் குறையுமா? காத்திருக்கும் தேர்வர்கள்!
TNPSC Group 4 தேர்வு முடிவுகள்.. கட்-ஆப் மதிப்பெண்கள் குறையுமா? காத்திருக்கும் தேர்வர்கள்!

TNPSC Group 4 தேர்வு ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி அன்று நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை இத்தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளது. மேலும் தற்போது கூடுதலான பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் குரூப் 4 பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி இதற்கான எழுத்து தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது.

தமிழகத்தில் புது மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுரை!

இத்தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக TNPSC தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதன் காரணமாக 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இத்தேர்வு எழுதிய எழுதிய லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், இவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியானது. அதாவது, Group 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் Group 4 தேர்வுக்கான கட் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்றும் இத்தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!