TNPSC குரூப் 4 தேர்வு கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு? தேர்வு வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற குரூப் 4 தேர்வு கட் ஆப் மதிப்பெண்கள் குறித்து முக்கிய அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும், TNPSC வெளியிட்டுள்ள உத்தேச விடைகளை தேர்வர்கள் மதிப்பீடு செய்து அடுத்த கட்ட நிலைக்கு தயாராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு:
இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஜூலை 24ம் தேதி 7,031 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு டிஎன்பிஎஸ்சி ஆல் நடத்தப்பட்டது. இந்த தேர்வினை 21 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியிருந்தனர். இந்த நிலையில் குரூப் 4 எழுத்து தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விடைகளை தேர்வர்கள் மதிப்பீடு செய்து அடுத்த நிலைக்கு தயாராகுமாறு தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
குரூப் 4 தேர்வில் முதன்மை தேர்வு, வாய்மொழி தேர்வு என எதுவுமின்றி எழுத்து தேர்வின் அடிப்படையிலும், வகுப்புவாரி இடஒதுக்கீடு அடிப்படையிலும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், என வகுப்பு பிரிவுகளுக்கு 69% இடஒதுக்கீடு முறை பின்பற்றபடுகிறது. மேலும் நேரடி நியமனங்களில் பெண்களுக்கு 30% விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. இதில் தகுதி வாய்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு 10% ஒதுக்கப்படுகிறது.
கோபியை ஏற்ற ராதிகா, வெறுப்பில் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
முந்தையை ஆண்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு மிக எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனால் அடுத்தகட்ட அழைப்புக்கான மதிப்பெண் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஆதிதிராவிடர், ஆதிதிராவிட பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இளநிலை உதவியாளர் பணிக்கு 170 கேள்விகளும், இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் 172 முதல் 175 கேள்விகள் சரியாக விடை அளித்திருக்கும் பட்சத்தில் அடுத்தகட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் 5 மடங்கு விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.