99 தேர்வர்கள்களுக்கு வாழ்நாள் தடை
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது சமீபத்தில் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருந்ததினால் அது குறித்த விசாரணையில் ஆணையமும் செயல்பட்டது. அதன் விசாரணையின் பலனாக தற்போது தேர்வு முறைகேட்டில் சிக்கிய சர்ச்சைக்குரிய ஒன்பது மையங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த தேர்வர்களிடையே விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களிலும் முறைகேடு நடைபெற்றது உறுதியானது. வேறு எந்த மையங்களிலும் முறைகேடு நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் இடைத்தரகர் உதவியுடன் தேர்வெழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு பதில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Official Press Note
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்