TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – Result எப்போது?
தமிழகத்தில் குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று TNPSC தேர்வாணையம் அறிவித்தப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குரூப் 4 தேர்வு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSCயின் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி TNPSCயின் குரூப் 2,2ஏ தேர்வு அறிவித்தபடி கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது. இதே போல் குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வு மூலம் 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். இத்தேர்வின் ANSWER KEY தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட தேர்வு என்பதால் தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற கட்ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் தற்போது 69% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வு எழுதிய தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதனால் இத்தேர்வின் கட் ஆப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தமிழக போக்குவரத்து துறை சேவை கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
அதன்படி தமிழில் 87-91 வினாக்கள், கணிதத்தில் 20-23 வினாக்கள், 56-61 வினாக்கள் வரை சரியான விடையளிக்கலாம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதையடுத்து குரூப் 4 தேர்வு முடிவுகளுக்காக தேர்வர்கள் காத்திருந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் 2வது வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Exam eppadi irkkum