TNPSC குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் யாருக்கு ????

0

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணணயம் தனது 12.02.2020 நாளிட்ட செய்தி வெளியீட்டு எண் 12/2020 ல், குரூப் 4 தேர்வுக்கு தற்காலிகமா சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் ஸ்கேன்  செய்யப்பட்ட தங்களது சான்றிதழ் நகல்களை 13.02.2020 முதல் 18.02.2020 க்குள் தேர்வாணணய இணணய தளத்தில், அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த செய்தி வெளியீடானது சில தேர்வர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, ஏற்கனவே இத்தேர்வுக்கென தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்களும் மீண்டும் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ விளக்கம்:

ஏற்கனவே 05.12.2019 முதல் 18.12.2019 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்த தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் தகுதியான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணணயத்தின் இணணயதளத்தில் 12.02.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் யாரும் தங்களது சான்றிதழை மீண்டும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. அவர்கள் கலந்தாய்வுக்கு வரும் போது தங்களது மூலச்சான்றிதழ்களை கொண்டுவந்தால்போதுமானதாகும்.

தற்போது கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களின் நகல்களை இ-சேவை  மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்தால் போதுமானது.

Download Selection List 2020

Download TNPSC Group 4 Official Press Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!