TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதை உடனே பாருங்கள்!
தமிழகத்தில் TNPSCயின் குரூப் 4 & VAO பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வில் எப்படி ஈஸியா வெற்றி பெறலாம் என்று பார்ப்போம்.
TNPSC குரூப் 4 & VAO தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் அறிவித்தபடி குரூப் 2,2ஏ தேர்வு கடந்த 21ம் தேதி அன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஜூலை 24ம் தேதி குரூப் 4 பணியிடத்திற்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு!
இத்தேர்வு ஒரே ஒரு படிநிலை கொண்ட தேர்வு என்பதால் பல லட்சக்கணக்கானோர் இத்தேர்வுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். இத்தேர்வு கொள்குறிவகையில் 200 வினாக்களைக் கொண்டது. இதில் 1 வினாவிற்கு 1.5 மதிப்பெண்கள் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். மேலும் தற்போது TNPSCயின் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இத்தேர்விலும் அதாவது பொது ஆங்கிலம்/பொது தமிழ் பிரிவு, பகுதி நீக்கப்பட்டு தமிழ்மொழி பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகளை கொண்ட பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து அடுத்த 100 வினாக்களில் 75 பொது அறிவுப்பகுதி மற்றும் 25 கணிதப்பகுதியிலிருந்து கேட்கப்படுகிறது. இதில் பொது அறிவுப்பகுதியில் உள்ள வினாக்கள் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம் மேலும் சில பகுதிகளில் இருந்து கேட்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கணிதப்பகுதி 10ம் வகுப்பு தரத்தில் கேட்கப்படுகிறது. இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் தேர்வுகள் அனைவரும் கடுமையாக தயாராகி கொண்டு வருகின்றனர். தற்போது தேர்வர்களுக்கு உதவும் வகையில் குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் சில முக்கியமான கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியவர் யார்?
A) லிட்டன் பிரபு
B) கர்சன் பிரபு
C) கானிங் பிரபு
D) ரிப்பன் பிரபு.
2. மனித சிறுநீரகத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி எது?
A) பிட்யூட்டரி சுரப்பி
B) தைராய்டு சுரப்பி
C) கணைய சுரப்பி
D) அட்ரீனல் சுரப்பி.
3. இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
I. பெங்களூர்
II. ஸ்ரீ ஹரிகோட்டா
III. மகேந்திரகிரி
IV. திருவனந்தபுரம்
4.கீழ்க்கண்டவற்றுள் ‘தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி’ என்ற துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வராத நிறுவனத்தை தேர்ந்தெடுக்க.
A) டிட்கோ
B) சிப்காட்
C) டிக்
D) ஐடிசி.
5. சந்திராயன் 1 உடன் தொடர்புடைய சில அமைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறானதைத் தேர்வு செய்க.
A)ISRO
B)BARC
C)NASA
D)ONGC.