தமிழகத்தில் இன்று TNPSC Group 4 தேர்வு – 7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி!

0
தமிழகத்தில் இன்று TNPSC Group 4 தேர்வு - 7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி!

தமிழகத்தில் இன்று TNPSC Group 4 தேர்வு – 7300 இடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி!

மாநிலத்தில் மிகப்பெரிய ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வை (குரூப் 4) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்துகிறது. மேலும் 7,331 பணியிடங்களுக்கான தேர்வை 22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 4 தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது. மேலும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. மேலும் தேர்வர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்று விட வேண்டும். இதையடுத்து தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணிக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வு எழுத செல்லும் தேர்வர்களுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேர்வர்கள் கவனத்திற்கு :

காலை 9 மணிக்கு OMR தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்படும்.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். முகக்கவசம் அணிந்து செல்வதும் கட்டாயம்.

பாஸ்போர்ட், ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் காபியையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

10ஆம் வகுப்பு தரத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெறும்.

பொது அறிவு பிரிவில் 75 திறனறிதல் பிரிவிலும், 25 கேள்விகள் கணிதம் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெறும்.

குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவார்கள்.

தேர்வர்கள் விடை குறிக்க வேண்டிய OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும்.

தங்களுடைய கையெழுத்தை OMR தாளில் இரண்டு இடங்களில் பதிவு செய்ய வேண்டும்.

இடது கை பெருவிரல் ரேகையை OMR தாளில் தேர்வு முடிந்த பின் பதிவிட வேண்டும்.
Black- Ball Point pen மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கேள்விக்கு விடையளிக்கும் போதும் ஒரே ஒரு சரியான விடையினை மட்டுமே நிரப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு விடை தெரியவில்லை என்றால்(E) என்பதை நிரப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!