டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு பழைய பாடத்திட்டமா! புதிய பாடத்திட்டமா! – உயர் நீதிமனற உத்தரவு என்ன?
தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நமக்கு விருப்பமான மொழியில் தேர்வு எழுதலாம்.
அண்மையில் குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதாவது மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பழைய பாடத்திட்டத்திலே தேர்வு நடத்தப்படவேண்டும் என வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு டி.என்.பி.எஸ்.சிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி தேர்வு குறித்த மேலும் பல தகவல்களை அறிய எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
TNPSC Group 2 & 2A பாடத்திட்டம் மாற்றம்
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்