TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? தேர்வாணையம் விளக்கம்!
தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த மாதத்தின் இறுதிக்குள் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டதால் தேர்வாளர்கள் தேர்வு முடிவினை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
குரூப் 2 தேர்வு முடிவு:
தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. கிட்டத்தட்ட 5413 பணியிடங்களுக்காக குரூப் 2, 2A தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் தற்போது வரைக்கும் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை. ஆரம்பத்தில் குரூப் 2 தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது வரைக்குமே குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது புதிராகவே உள்ளது. முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்பதால் தேர்வாளர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர். இதற்கு இடையே குரூப் 2 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டிருந்தது. அதாவது, ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர் மற்றும் அனைத்து வகுப்பையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் குரூப் 4 தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியாக விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறலாம்.
தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து உயர்வு? பொதுமக்கள் அவதி!
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்த தேர்வாளர்கள் 140 கேள்விகளுக்கு சரியாக விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறலாம் எனவும், மற்ற பிரிவை சேர்ந்த தேர்வாளர்கள் 147 முதல் 150 கேள்விகளுக்கு சரியாக விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியும் இந்த மாதத்தின் இறுதிக்குள் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும் என தகவல் வெளியான நிலையில் தேர்வாளர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.