TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர்முகத்தேர்வு நீக்கம்! அரசு முடிவு!

0
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நேர்முகத்தேர்வு நீக்கம்! அரசு முடிவு!
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நேர்முகத்தேர்வு நீக்கம்! அரசு முடிவு!
TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர்முகத்தேர்வு நீக்கம்! அரசு முடிவு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனங்கள் செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேர்முகத்தேர்வு:

தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. துறை சார்ந்த பணிகள் அதற்கேற்ற கல்வித்தகுதி அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் டெட் போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக TNPSC தேர்வுகள் நடைபெறவில்லை.

சென்னையில் தொடரும் கனமழை, 2 சுரங்கப் பாதைகள் மூடல் – போக்குவரத்திற்கு தடை விதிப்பு!

தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருவதால் விரைவில் அரசு பணிகளுக்கான தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசு குரூப் 2 பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுவை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பணிகளில் குரூப்-B பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் நேர்முகத்தேர்வை ரத்து செய்ய உள்ளது.

டிசம்பரில் திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் விநியோகம் துவக்கம்!

குரூப்-2 பணிகளில் அடிப்படை ஊதியத்திற்கு மேல் உள்ள பணியிடங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பிற பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் குரூப்-2 பணிகள், குரூப்-2-ஏ தேர்வின் கீழ் கொண்டு வரப்படலாம். அதன்படி தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகிய பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நீக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!