TNPSC குரூப் 2 & குரூப் 4 VAO தேர்வு தேதிகள் இன்று அறிவிப்பு? முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) இன்று (செப்டம்பர் 22) முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.
TNPSC தேர்வுகள்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்படவில்லை. அதாவது நாடு முழுவதும் உருவான கொரோனா 2 ஆம் அலை பரவலால் திட்டமிப்பட்ட குரூப் தேர்வுகளை தமிழக அரசால் நடத்த முடியவில்லை. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணையின் படி, சுமார் 38 தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதற்கு முன்னதாக கூட கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான TNPSC குரூப் தேர்வுகளும் கொரோனாவால் தடைபட்டது.
தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
அதனால் அரசு வேலைக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் அதிருப்திக்குள்ளாயினர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்பொழுது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்திருப்பதால், TNPSC தேர்வுகளை நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் வழக்கமான தேர்வு கால அட்டவணையின் படி, செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டிய குரூப் 2 மற்றும் குரூப் 4 குறித்த அறிவிப்புகள் தற்சமயம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக தமிழ் நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 22) ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வெளிவந்துள்ள தகவல்களின் படி, அனைத்து வகையான TNPSC தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாளை இணைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Government job
Welcome