TNPSC குரூப் 2, குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வில் நேர மாற்றம்!
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. தற்போது தேர்வு நேரத்தில் புதிய மாற்றத்தை TNPSC கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பற்றி பார்க்கலாம்.
நேர மாற்றம்
தமிழகத்தில் அரசு பணிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் மூலமாக தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2,2ஏ, குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? முதல்வரின் முடிவு!
அதன்படி குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதமும் அத்துடன் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதமும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2 தேர்வுக்கான பணியிடத்தில் 5831 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 4 தேர்வுக்கான பணியிடத்தில் 5255 காலிப்பணியிடங்களும் உள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்களை தயார்ப்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும் TNPSC தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் திரு.கா.பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு எடுக்க விரும்புவோர் கவனத்திற்கு – முக்கிய விதிமுறைகள் இதோ!
அவர் கூறியதாவது, TNPSC அறிவித்தபடி அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தாள் கட்டாயமாக நடத்தப்படும் என்றும் குரூப் 1 மெயின் தேர்வு திட்டமிட்டபடி மே மாதம் 4,5 6 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து குரூப் 2,2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்பட்டு அடுத்த 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து இதுவரை போட்டி தேர்வுகள் காலையில் 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்று வருகிறது. ஆனால் இனிவரும் காலங்களில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்றும் மாலையில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம் போல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.