TNPSC Group 2 & 2A முடிவுகள் எப்போது அறிவிப்பு? முக்கிய தகவல்!
தமிழகத்தில் கடந்த மே மாதம் குரூப் 2 & 2A தேர்வுகள் நடைபெற்றது. மேலும் இதற்கான முதல் நிலை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குரூப் 2 தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு ஆண்டுதோறும் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து நாடு பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து போட்டி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பார்சல் சேவை – குவியும் வரவேற்பு!
அந்த வகையில் தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. மேலும் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து இதற்கான முதல் நிலை தேர்வு செப்டெம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே 7138 குரூப் 4 லிப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது குரூப் 4 தேர்வுக்குப் பிறகு குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற செய்தி வெளியாகி வருகிறது. இதற்கிடையில் முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், முதல்நிலைத் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து உள்ளனர். மேலும் முதன் நிலை தேர்வுகள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்