TNPSC குரூப் 2 & 2A தேர்வு எழுதியவர்களுக்கு Result எப்போது? வெளியான தகவல்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் திட்டமிட்டபடி கடந்த மே 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று அறிவித்தபடி நடைபெற்றது.
இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 11,78,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இத்தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே எழுதியுள்ளனர். மேலும் TNPSC தேர்வு கால அட்டவணையில், குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் மாதத்தில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. ஆனாலும் குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலைத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
Exams Daily Mobile App Download
PM Kisan திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – 12 ஆவது தவணை எப்போது?
இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டதால் இத்தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தற்போது குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை ஒரு பதவிக்கு 10 மடங்கு தேர்வர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர்.