TNPSC குரூப் 1 தேர்வு.. விண்ணப்பித்த 59.23% பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்பு – ஷாக்கிங் நியூஸ்!
தமிழகத்தில் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வானது இன்று (நவ 19) காலை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 3,22,414 பேரில் 59.23% பேர் மட்டுமே தேர்வு எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
TNPSC குரூப் 1 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்நிலையில் இந்த ஆண்டு துணை ஆட்சியர் (18), கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் (13), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), வணிகவரி உதவி ஆணையர் (25) உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு இன்று (நவ. 19) தமிழகம் முழுவதும் 38 மையங்களில் நடைபெற்றது.
தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
92 பணியிடங்களுக்கு சுமார் 3,22,414 விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற தேர்வில் சுமார் 1,90,957 பேர் மட்டுமே தேர்வு எழுதி இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் 1,31,457 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் 1.31 லட்சம் பேர் ஆப்சென்ட் என்பதால் 59.23% பேர் மட்டுமே தேர்வு எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.