TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !
தொகுதி 1 தேர்விற்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை இணையவழி பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) -ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரி, தமிழ் வழியில் முதல் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வி பயின்றதற்கான சான்றுகளை 16.08.2021 முதல் 16.09.2021 வரை இணையவழி பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்ற சான்றிதழ்களை சரி பார்ப்பதற்கு உரிய சான்றிதழ்களோடு குறிப்பாணையில் குறிப்பிட்டுள்ள தேதி/நேரத்தில் தேர்வாணைய அலுவலகத்திற்கு வருகைபுரியும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
1. பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை
2. மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப் படிப்பு
3. பட்டப் படிப்பு
இது குறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இது குறித்த குறிப்பாணையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று TNPSC அறிவித்துள்ளது.
Thank u