தமிழகத்தில் திட்டமிட்டபடி குரூப் 1 தேர்வு நாளை நடைபெறும் – டி.என்.பி.எஸ்.சி உறுதி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நவம்பர் 19 ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறும் என TNPSC சார்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு நாளை நடைபெறும்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற நவம்பர் 19ம் தேதி காலை 9.30 AM முதல் 12.30 PM மணிவரை குரூப் 1 தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதற்காக தேர்வர்கள் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில் தேவையான ஏற்பாடுகளை TNPSC ஆணையம் செய்து வருகிறது. ஏற்கவனே சில தொழில் நுட்ப காரணங்களால், பல்வேறு முறை இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில், 2022 ஆம் ஆண்டில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 1 மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, முதல் நிலைத் தேர்வுகள் நவம்பர் 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
அதிரடியாக 1,300 பணியாளர்களை தூக்கியுள்ள முக்கிய நிறுவனம் – தொடரும் பணி நீக்க சிக்கல்கள்!
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடைபெறுமா? இல்லையா? என தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், TNPSC முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, பள்ளி, கல்லூரிகள் செயல்பட உள்ள நிலையில் நாளை குரூப்-1 தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.