TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுகள் ஒத்திவைப்பு? தேர்வர்கள் கோரிக்கை!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற மே மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டு உள்ள குரூப் 1 முதன்மை தேர்வுகள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒத்திவைக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.
TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுகள்:
தமிழக அரசு பணிகளுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்ய TNPSC மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, 18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர், 10 வணிக வரிகள் உதவி ஆணையாளர், 14 கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், 4 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், 1 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் 1 என மொத்தமாக 66 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக நடத்தப்படாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டு, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி சுமார் 856 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி தாளாளர்கள் கோரிக்கை!!
இந்நிலையில் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற மே மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முதன்மை தேர்வுகள் நடைபெற உள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தேர்வுகள் நடைபெற்றால் வெளி மாநிலங்களில் இருந்து பலர் தங்களது குடும்பங்களுடன் வந்து சென்னையில் தங்க நேரிடும். இதனால் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி அனைத்து எழுத்து தேர்வுகளும் ஒத்திவைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தட்டச்சு, கணினி பயிற்சி மையங்கள் திறப்பு – அரசுக்கு கோரிக்கை!!
எனவே மே மாதம் நடைபெற உள்ள குரூப் 1 முதன்மை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர். பல சிரமங்களுக்கு நடுவே இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.