TNPSC குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் குரூப் 1 தேர்விற்கான அதிகபட்ச வயது 34 ஆக உள்ளது. இந்த வயது வரம்பை பொது பிரிவினருக்கு 40 வயதாகவும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
குரூப் 1 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 முதலான தகுதித்தேர்வின் மூலமாக தகுதியான தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதாவது, 18 துணை ஆட்சியர், 26 காவல் துணை கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு துணைப் பதிவாளர், 7 ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் மற்றும் 3 மாவட்டத் தீயணைப்பு அதிகாரி என மொத்தமாக 92 பணியிடங்களுக்காக குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் குரூப் 1 தேர்வினை எழுத 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இட ஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 39 வயது வரைக்கும் எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தை விட இந்தியாவின் 11 மாநிலங்களில் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு அதிகமாக உள்ளது. குஜராத், ஹரியானா, பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது 45 ஆக உள்ளது.
தமிழகத்தில் தகுதியற்ற ஓய்வுதாரர்கள் நீக்கம்? அரசு அதிரடி நடவடிக்கை
Exams Daily Mobile App Download
அதே நேரத்தில், ஆந்திராவில் அதிகபட்ச வயது வரம்பு 47 ஆகவும், தெலங்கானாவில் அதிகபட்ச வயது வரம்பு 49 ஆகவும், கேரளாவில் ஒரு சில பணிகளுக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 53 ஆக உள்ளது. இதனால், தமிழகத்திலும் குரூப் 1 தேர்விற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது, குரூப் 1 தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 45 ஆகவும் உயர்த்த வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Super sir