TNPSC தேர்வில் கொண்டு வரப்பட்ட புதிய நிபந்தனை – தவிக்கும் தமிழக மாணவர்கள்!!
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலரான DEO பணியிடங்களுக்கான நேரடி தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. ஆனால் இதில் கொண்டு வந்த நிபந்தனை காரணமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த தமிழக மாணவர்களால் இத்தேர்வு எழுத முடியாத நிலை உள்ளது.
புதிய நிபந்தனை:
தமிழகத்தில் கல்வித்துறையில் காலியாக இருந்த மாவட்ட கல்வி அலுவலரின் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் முதுகலை பட்டப்படிப்புடன் பிஎட் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் மேல்நிலை வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவராக இருக்க வேண்டும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை நிறுவன கண் சொட்டு மருந்துக்கு தடைபோட்ட அமெரிக்கா – ஒருவர் பலி! பலருக்கு பறிபோன பார்வை!
Follow our Instagram for more Latest Updates
இதனால் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களால் இத்தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தமிழ் ஒரு பாடமாக இடம் பெறவில்லை. மேலும் இது தொடர்பாக தேர்வர்கள் கூறியதாவது, TNPSC சார்பாக நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் துணை கலெக்டர், துணைப் பதிவாளர், டி.எஸ்.பி., மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மேல்நிலை வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை கிடையாது.
இந்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு மட்டும் இத்தகைய நிபந்தனை உள்ளது. இதனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இந்த நிபந்தனையை தளர்த்தி புதிய அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.