TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் முக்கிய தகவல்!
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
குரூப் 1 தேர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அத்துடன் அரசு துறைகளில் இருக்கும் பதவிகளுக்கேற்ப குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 3, குரூப் 4 என குரூப் 8 வரை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் அறிவித்தப்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 2,2ஏ, குரூப் 4 தேர்வு எந்தவித இடையூறுமின்றி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி, உதவி காடுகளின் பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் வழங்கப்பட்டது. அத்துடன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் இதனை வருகிற ஆகஸ்ட் 27 முதல் 29 வரை திருத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Google Chrome, Apple பயனர்களுக்கு அரசு எச்சரிக்கை – முழு விவரம் இதோ!
இத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதன்மை தேர்வுக்குரிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி இத்தேர்வுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இத்தேர்வுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தேர்வு தொடங்கும் ஒரு வார காலத்திற்கு முன்பாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்