TNPSC தேர்வுகளுக்கு இலவச பயிற்சி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன
பயிற்சி வகுப்பு:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெறுவதை இலக்காக வைத்து இளைஞர்கள் பயிற்சி வகுப்பு சென்று வருகின்றனர். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலம் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய & மாநில அரசு வேலை மற்றும் வங்கிகளில் வேலை என பல இருக்கும் பட்சத்தில் இளைஞர்கள் பயிற்சி வகுப்பு மூலம் தங்களை தயார் செய்து வருகின்றனர்.
வீட்டில் இருந்தபடியே Jio சிம் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக அரசு பணிகளுக்கான புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக ஏற்கனவே அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படி 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது.அதே போல TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வு மே மாதத்தில், குரூப் 3 தேர்வு ஜூலை மாதத்திலும் நடத்தப்படும். மேலும் செப்டம்பர் மாதத்தில் குரூப் 4 மற்றும் VAO தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3ம் அலை தொடக்கம்? அரசின் முயற்சிகள்!
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இலவச பாடக்குறிப்புகள் வழங்குவதோடு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். எனவே போட்டி தேர்வு எழுத ஆர்வமுள்ளவர்கள் இந்த பயிற்சி வகுப்பு மூலம் பயன்பெறலாம் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.