TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வுகள் ஒத்திவைப்பு | முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 04.12.2022 முதல் 11.12.2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த எழுத்து தேர்வு மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு
தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த தேர்வை 01.04.2022 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராகவும் 32 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்கள் எழுதலாம். இத்தேர்வை எழுத வனவியலில் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் எழுதலாம்.
Follow our Instagram for more Latest Updates
இதே போல் கால்நடை பராமரிப்பு விவசாயம், தாவரவியல், கால்நடை அறிவியல், கணினி பயன்பாடுகள், வேதியியல், பொறியியல் (அனைத்து பொறியியல் பாடங்களும் வேளாண் பொறியியல் உட்பட), கணினி அறிவியல், புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல், கடல் உயிரியல், தோட்டக்கலை, இயற்பியல், கணிதம், வனவிலங்கு உயிரியல், புள்ளிவிவரங்கள், விலங்கியல் பிரிவில் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுத தகுதியுடைவர்கள்.
தமிழகத்தில் டிச.12 (திங்கட்கிழமை) பல பகுதிகளில் மின்தடை – முக்கிய விவரங்கள் உள்ளே!
Exams Daily Mobile App Download
இப்பணியிடத்தில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், உடற்தகுதி தேர்வு மற்றும் வாய் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக இந்த பணிக்கான தகுதித் தேர்வு 04.12.2022 முதல் 11.12.2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த எழுத்து தேர்வு மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் இத்தேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.