TNPSC தேர்வு தேதி & மையம் திடீர் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான தேர்வு தேதி மற்றும் மையம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பை TNPSC தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TNPSC வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு தேதி & மையம் மாற்றம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வனத்தொழில் பழகுநர் (தொகுதி-VI) பதவிக்கான அறிவிப்பானது ஆகஸ்ட் முதல் வாரம் வெளியானது. இந்த அறிவிப்பின் மூலம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட இருந்தனர். மேலும் இந்த தேர்வுகள் 03.12.2022 முதல் 13.12.2022 வரை நடைபெற உள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
தற்போது TNPSC ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த எழுத்து தேர்வுகள் OMR வகை/ கணினி வழி தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் இந்த தேர்வுகள் 15 மையங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வுகள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய ஏழு மையங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் Paper 1 OMR தேர்வானது 04.12.2022 அன்று நடைபெற உள்ளது.
34 லட்சம் இந்தியர்களின் PassWord இது தான் – ஆய்வில் வெளியான ஷாக்கிங் தகவல்!
Exams Daily Mobile App Download
Paper 2 விருப்பப் பாடங்களுக்கான கணினி வழி தேர்வானது 05.12.2022 முதல் 11.12.2022 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 2.30 முதல் 5.30 வரை நடைபெற உள்ளது. கணினி வழித் தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.