TNPSC ஆணையத்தில் Executive Officer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.71,900/- வரை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Executive Officer Grade IV பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 18.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Executive Officer Grade IV |
பணியிடங்கள் | 36 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNPSC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி TNPSC ஆணையமானது Executive Officer Grade-IV பணிக்கென 36 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Grade IV கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகத்தில் பாணிக்கு தொடர்புடைய கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் “தமிழ்ப் புலவர்” என்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
TNPSC வயது வரம்பு:
Executive Officer Grade IV பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.19,500/ -முதல் ரூ.71,900/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக தேர்வானது 11.09.2022ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
TNPSC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.06.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.இறுதி நாள் முடிந்தபின் பெறப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.