TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வு ஜூன் 19 ஆம் தேதி முதல் கணினி வாயிலாக நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தற்போது விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது.
TNPSC:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் ஊரடங்கால் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் அரசுத்துறை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் தொழில்கள் சரிவடைந்ததால் தனியார் துறைகளும் பணி வாய்ப்புகளை வழங்கவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
WIPRO முதல் BHU நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விவரம் இதோ!
அந்த வகையில் TNPSC குரூப் 2 மற்றும் 4 தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சமூக பாதுகாப்பு துறையின் கீழ் வரும் 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வு ஜூன் 19 ஆம் தேதி கணினி வழியாக நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 30 ஆம் தேதி விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு 60 வயது வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகள் மட்டுமே கணினி வழியில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பதவிகளுக்கான தேர்வும் கணினி முறையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.