TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு மையம் மாற்றம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாளை (மே.21) தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான மையம் திடீரென மாற்றப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்வு மையம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) நடத்தும் குரூப் 2 தேர்வுகள் நாளை (மே.21) மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக நிலவும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2 தேர்வானது நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இத்தேர்வின் மூலம் சுமார் 5,529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த தேர்வுக்காக தற்போது தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 136 தேர்வு மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டத்தில் மொத்தம் 37,366 பேர் இப்போட்டித் தேர்வை எழுத உள்ளனர்.
TN TRB 1060 காலிப்பணியிடங்கள் – இன்று முதல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதி!
இந்த நிலையில் குரூப் 2 தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கான குரூப் 2 தேர்வின் முதல்நிலைப் போட்டியை வரும் 21ம் தேதி நடத்த இருக்கிறது. இத்தேர்வுகள் நாளை முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 136 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. இதனுடன் மற்ற அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது, குரூப் 2 போட்டித் தேர்வினை எழுத இருக்கும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்களின் அனுமதிச் சீட்டில் நல்லம்பள்ளி வட்டம், Hall No.039, அரசு மேல்நிலைப்பள்ளி, கூலி கோட்டை, ராஜகொல்லஹள்ளி (P.O),பி. அக்ரஹாரம் விஸ், நலம்பலில் தாலுகா என இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு பதிலாக அரசு மேல்நிலைப் பள்ளி, பி.அக்ரஹாரம், பென்னகரம் மெயின் ரோடு என தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. எனவே, ஹால் எண்.039ல் தேர்வு எழுதும் தேர்வர்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, பி.அக்ரஹாரம், பென்னகரம் மெயின் ரோடு என்ற தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.