TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த முழு விபரங்கள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரசு போட்டித் தேர்வுகளில் பாடத்திட்டம், விதிமுறைகள் போன்றவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர்வு முறை, பாடத்திட்டம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC தேர்வு குறித்த அறிவிப்புகள் அண்மையில் வெளியானது. கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை என்பதால் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 4 தேர்வு அறிவிப்புகள் 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு முறைகள் மற்றும் பாடத்திட்டங்களிலும் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி TNPSC தேர்வில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பீடு தேர்வு!
தமிழ் மக்கள் 100% அரசு பணிகளில் சேரும் நோக்கில் இந்த புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழ் மொழித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற பாடத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழித் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படும். இந்த அரசாணைக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
இதையடுத்து தேர்வுக்கான புதிய மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் எவ்வாறு அமையும் என்ற கேள்வி அரசு போட்டித்தேர்வு எழுதவுள்ளோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனையடுத்து புதிய பாடத்திட்டம், தேர்வு முறை குறித்த விவரங்கள் https://www.tnpsc.gov.in/Tamil/new_syllabus.html என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் இந்த மாதிரி வினாத்தாளை பார்த்து தெரிந்து கொண்டு பயனடையலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.