TNPSC தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது Executive Officer, Grade-I பணி முதல் குரூப் 4 தேர்வு வரை முடிவுகள் வெளியாகும் காலம் குறித்த அறிவிப்பு ஒன்றைதற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது Executive Officer, Grade-I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை 21.01.2022ம் தேதி வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்பணிக்காக தேர்வானது கடந்த 23.04.2022ம் தேதி மற்றும் 24.04.2022 ம் தேதியில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அதற்கான தேர்வு முடிவுகள் 22.06.2022ம் வெளியானது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் Executive Officer, Grade-I பணிக்கு தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் Oral Test நடைபெறும் தேதி குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Executive Officer, Grade-I பணிக்கான எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் Oral Test ஆனது 18.08.2022ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
இதனை தொடர்ந்து TNPSC குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் மற்றும் Combined Engineering Service Examination தேர்வு முடிவுகளும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC குரூப் 4 பணிக்கு காலியாக உள்ள 7301 பணியிடங்கள் நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Motor Vehicle Inspector, Grade – II பணிக்கான Oral Test ஆனது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. Assistant Public Prosecutor, Grade-II பணிக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாத வெளியாகும் எனவும், Assistant Director of Co-operative Audit பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Assistant Director of Town and Country Planning பணிக்கு மற்றும் District Child Protection Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான Onscreen Certificate Verification நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.