TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறைக்கான அனைத்து தேர்வு முடிவுகளும் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக அரசாணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகள்:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலியிடங்கள் அனைத்தும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்படுகின்றது. பதவிகளின் நிலைகளை பொறுத்து தனித்தனியாக தேர்வுகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அரசு பணிகளில் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்களை அடுத்து, தற்போது அரசு ஊழியர்கள் நியமனத்தில் புதிய முறைகள் கடைபிடிக்கப்படுகிறது. இதன்மூலம் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படுகிறது.
மேலும், அரசு ஊழியர்கள் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நிம்மதியை அளிக்கிறது. கொரோனா காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் எந்த வித அரசு துறைகளுக்கான ஊழியர்களும் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் நடப்பாண்டில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் காலியிடங்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு, இதற்கான தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டது.
அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மே 2022ல் பள்ளிகல்வித்துறையில் பல தேர்வுகளை நடத்தியது. தற்போது பள்ளி கல்வித்துறையில் நடத்திய அனைத்து தேர்வுகளின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த தேர்வின் முடிவுகள் அனைத்தும் 02.09.202 அன்று புதுப்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Plese job
No comments
Nice