TNPSC குரூப் 1, 2 & 4 VAO தேர்வுகள் அறிவிப்பு 2021 – நாளை முக்கிய முடிவு! தேர்வாணையம் ஆலோசனை!
சென்னையில் நாளை நடக்கும் TNPSC ஆலோசனை கூட்டத்தில் குரூப் 2, குரூப் 1, குரூப் 4 VAO ஆகிய தேர்வுகளின் தேதிகளை பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதனால் தேர்வர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
TNPSC அறிவிப்பு:
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக அரசு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அக்டோபர் மாதம் டி.என்.பி.எஸ்.சி வாரியம் குரூப் 2, குரூப் 1, குரூப் 4 VAO போன்ற தேர்வுகளை பற்றிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முக்கிய அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை கூட்டம் முன்னதாக நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான புதிய அறிவுரைகள் கடந்த மாதம் இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மற்றும் அக்.30 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு! CEO முக்கிய உத்தரவு!
அதில், தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை, பொதுத்தகுதி நிபந்தனை, வயது வரம்பு சலுகை, இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகளும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருந்து வரும் One Time Registration ஐந்து வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை தெளிவாக இல்லை என்றால் அவை நிராகரிக்கப்படும். அதுமட்டுமின்றி பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
ஆனால் குரூப் 2, குரூப்-1, குரூப்-4 ஆகிய தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் அக்டோபர் 27ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. அதில் குரூப் 2, குரூப்-1, குரூப்-4 தேர்வு நடைபெற உள்ள தேதிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதனால் தேர்வுகளின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.