டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது???
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருடம்தோறும் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கொரனோ வைரஸ் தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தேர்வுகள் எப்போது நடைபெறும் என அறிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இப்போதைக்கு இல்லை:
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நாளைக்கு நாள் கொரனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
3 மாத கால அவகாசம்:
கொரனோ நோய் தொற்று சூழல் சரியான உடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். எனவே தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் எனவும், கொரோனா பாதிப்பு முடிந்த பின் 3 மாத கால இடைவெளி விட்டு தான் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே கட்டயாமாக ஒரு மாத கால இடைவெளி அளிக்கப்படும் என நந்தகுமார் அவர்கள் தெரிவித்து உள்ளார்.