TNPSC தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு – முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான துறைத்தேர்வு கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வின் உத்தேச விடை குறிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதனால் தேர்வெழுதியவர்கள் இணையதளத்தில் சென்று விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.
துறைத்தேர்வு:
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே 21ம் தேதி குரூப் 2, 2A தேர்வின் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வரும் ஜூலை 24ம் தேதி இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், நில வரைவாளர், ஸ்டெனோ டைபிஸ்ட், பில் கலெக்டர் ஆகிய பணியிடங்களுக்கான குரூப் 4 & VAO தேர்வும் நடைபெறவுள்ளது. மேலும் பிற துறைகள் சார்ந்த போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்காக துறை தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 6ம் தேதி தேர்வு நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
பொதுவாக, ஆண்டுத்தோறும் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020, 2021ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக துறைத் தேர்வு 2 வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது பாதிப்புகள் குறைந்து அனைத்து தேர்வுகளும் வழக்கம் போல நடைபெற்று வருவதால் துறைத் தேர்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 6ம் தேதி கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை என்ற புதிய பாடத்திட்ட அடிப்படையில் தமிழகத்தில் 39 தேர்வு மையங்களில் தேர்வு சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் நெல் விதைப்பு பணி – 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
தற்போது, இந்த தேர்வின் உத்தேச விடைகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து,தேர்வர்கள் இணையதளத்தில் கொள்குறி வகை தேர்வின் விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விடைகளில் ஏதேனும் மறுப்புகள் இருந்தால் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி மாலை 5.45 மணி வரை தங்களின் மனுக்களை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவில் விண்ணப்பதாரர்கள் நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை ஆகியவற்றை மனுவில் விவரமாக குறிப்பிட வேண்டும் என்றும், அதனை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.