TNPSC துறைத் தேர்வு மே 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சமீபத்தில் இந்த ஆண்டிற்கான துறைத் தேர்வு (மே – 2022)குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஏற்கனவே பணிபுரியும் பணியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த ஆண்டு (2022) மே மாதம் துறைத் தேர்வுகள் குறித்து தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் முன்னதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஏதேனும் ஒரு துறையின் பிரிவில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகுதி குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணிக்கு ஏற்றாற்போல் அரசு ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்பணிக்கு தேர்வு கட்டணமாக ரூ.200 அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு பதிவு செய்ய பதிவு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இந்த துறை தேர்வுகளுக்கு பதிவுதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் Descriptive Type தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.04.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.