TNPSC Departmental Exam 2021 -விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தால் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நிரந்தர பதிவு துறைத்தேர்வுக்கான அறிவிப்பானது வெளியானது. இந்த தேர்வுகு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 28 ஆம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
14 டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் – ஜூன் மாதம் வெளியீடு !
கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் நலனை கருத்தில் கொண்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி தேதியை வரும் ஜூன் மாதம் 15 வரை அரசு நீட்டிப்பு செய்துள்ளது. அரசுப்பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவருக்கும் நடத்தப்படும் இந்த தேர்வானது 22.06.2021 முதல் 30.06.2021 வரை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவுக்கட்டணமாக ரு.300 ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது இணையவங்கி / பற்று அட்டை / கடன் அட்டை முறை ஆகியவற்றில் ஏதெனும் ஒரு முறையில் மட்டுமெ தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம். எனவே, ஆர்வமுள்ளவகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.06.2021 வரை தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
Please give opportunity
Give opportunity for jobs