TNPSC டிசம்பர் துறைத்தேர்வு அறிவிப்பு 2022 – விண்ணப்பிக்க அக்டோபர் 21 கடைசி நாள்!
2022 ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத துறைத் தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC துறைத்தேர்வு அறிவிப்பு:
- டிசம்பர் 2019 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட துறைத்தேர்வை அரசு பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இவ்வறிக்கை நாளன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
- ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரு.30/- ம் சேர்த்து இணையவழி செலுத்தும் முறையில் அதாவது Net banking / Detit Card / Credit Card ஆகியவற்றில் ஏதேனும் ஒரு முறையில் மட்டுமே ஆன்லைன் முறையில் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
- Objective Type in Computer Based Test தேர்வுகள் 12.12.2022 முதல் 16.12.2022 வரையிலும் நடைபெற உள்ளது. அதேபோல் Descriptive Type தேர்வுகள் 17.12.2022 முதல் 21.12.2022 வரை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 21.10.2022 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.